Header

Sri Lanka Army

Defender of the Nation

22nd November 2021 11:00:04 Hours

121 வது பிரிகேட் படையினர் நன்கொடையாளர்களின் உதவியுடன் கதிர்காமத்தில் ஆதரவற்ற குடும்பத்திற்கு புதிய வீடு நிர்மாணிப்பு

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் 121 வது பிரிகேடின் 20 வது இலங்கை சிங்கப் படையணியின் படையினரால் இராணுவ தளபதி அவர்களின் எண்ணகருவிற்கமைய நாடளாவிய ரீதியில் செயற்படுத்தப்பட்டு வரும் வீடமைப்பு திட்டத்திற்கு இணங்க செல்ல கதிர்காமம் பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பம் ஒன்றிற்கு மேலும் ஒரு வீட்டை நிர்மாணித்து சனிக்கிழமை (20) கையளித்தனர்.

இந்திட்டமானது உரிய குடும்பத்ததாரின் வாழ்க்கை நிலைமைகளைக் கருத்தில் கொண்டு இவ் வீட்டைக் நிர்மாணிப்பதற்காக படையினர்கள் நன்கொடையாளர்களின் மூலப்பொருட்களின் உதவியுடன் கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டன. திரு நிலந்த பிரதீப் குமார தனது குடும்ப உறுப்பினர்களுடன் இவ் வீடமைப்பு திட்டத்தினால் பயனடைந்தார். படையினர் தங்கள் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் திறன்கள் மற்றும் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் ஒரு சில வாரங்களுக்குள் வீட்டை நிர்மாணித்தனர்.

12 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க அவர்கள் இந்த நிகழ்வில் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக கலந்து கொண்டு புதிய வீட்டின் சாவியை வழங்கி வைத்தார்.