01st November 2021 17:20:02 Hours
முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 64 வது படை பிரிவின் 641 பிரிகேட்டின் 14 வது இலங்கை சிங்க படையணியனரால் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரின் வேண்டுகோளுக்கினங்க பாடசாலை வளகத்தில் வியாழக்கிழமை (28) சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான முன்னேற்பாடாக 641 வது பிரிகேட் தளபதியின் வழிகாட்டலின் கீழ் 14 வது சிங்க படையின் கட்டளை அதிகாரியினால் மேற்படி திட்டம் மேற்கொள்ளப்பட்டது.