17th November 2021 08:00:21 Hours
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் அதிகாரிகளுக்கான விடுதி கட்டிட தொகுதியை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களினால் கொஸ்கம சீதாவக்கபுர வளாகத்தில் 16 ம் திகதி செவ்வாய்க்கிழமை நாட்டி வைக்கப்பட்டது.
இத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணத்திற்கு மத்தியில் இடம்பெற்றதோடு , நீண்ட தேவையாக காணப்பட்ட மேற்படி கட்டிடத்தின் நிர்மாண பணிகள் இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் தொழில்நுட்ப வல்லுனர்கள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களால் முன்னெடுக்கப்படவுள்ளன.
இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் பிரதி தளபதி மேஜர் ஜெனரல் கிறிஸ்டி ஜயசிங்க மற்றும் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகளும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி கலந்துகொண்டிருந்தனர்.