17th November 2021 09:00:21 Hours
வடமாகாண ஆளுநர் கௌரவ. ஜீவன் தியாகராஜா வன்னியில் முன்னெடுக்கப்படும் பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் அறிந்து கொள்ளும் நோக்கில் வன்னிப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களை திங்கட்கிழமை (15) சந்தித்தார்.
வரவேற்பினை தொடர்ந்து மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்கள் ஆளுநருடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது வன்னியின் பாதுகாப்புச் செயற்பாடுகள் மற்றும் சமூக மேம்பாட்டுக்கான திட்டங்களுடன் மக்களுக்கு அவசியமான நலன்புரி நடவடிக்கைகள் என்பன தொடர்பிலும் எடுத்துரைத்தார்.
நல்லெண்ண அடிப்படையிலான கலந்துரையாடலின் நிறைவில், மேஜர் ஜெனரல் ரணசிங்க அவர்களால் ஆளுநருக்கு நினைவுச் சின்னமொன்றும் வழங்கி வைக்கப்பட்டது.