15th November 2021 05:52:15 Hours
53 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ பெனான்டோ 7 நவம்பர் 2021 ஹபரன இனாமலுவையில் அமைந்துள்ள 532 வது பிரிகேடிற்கு முதலாவது விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
இவ்விஜயத்தின் போது பிரிகேட் தளபதியின் புதிய அலுவலகத்தை திறந்துவைத்த அவர், மரக்கன்று ஒன்றை நாட்டி வைத்த பின்னர் படையினருக்கான உரையொன்றையும் நிகழ்த்தினார்.
அதேபோல், 4 வது இலங்கை இலேசாயுத படையணிக்கும் விஜயம் மேற்கொண்டிருந்த அவர், பக்மதியாவ பகுதியை தளமாக கொண்ட 4 வது இலங்கை இலேசாயுத படையணியின் எல்பா குழுவின் செயற்பாடுகளையும் பார்வையிட்டார்.
தொடர்ந்து, 8 வது கஜபா படையணி முகாமிற்கான விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த தளபதி அங்குள்ள படையினருக்கும் உரையாற்றினார்.