15th November 2021 06:52:15 Hours
இராணுவத்தின் முதலாம் படையணியின் தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க 58 வது படைப்பிரிவிற்கு சனிக்கிழமை (6) முதலாவது விஜயத்தை மேற்கொண்டார்.
பிரதான நுழைவாயிலில் 58 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித அலுவிஹாரே அவர்களினால் முதலாம் படையணித் தளபதிக்கு, படையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. அதனையடுத்து, புத்தளத்திலுள்ள தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்ட தளபதிக்கு 58 வது படைப்பிரிவு தளபதி, கட்டளை அதிகாரிகள், பிரதேச அதிகாரிகள் ஆகியோரால் வரவேற்பளிக்கப்பட்டது.
இதன்போது இராணுவ சம்பிரதாயங்களுக்கமைவாக முதலாம் படையணியின் தலைவர் குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்வில் இணைந்துகொண்டிருந்ததோடு, அதிகாரிகளுக்கான உணவக வளாகத்தில் நடைபெற்ற விருந்துபசாரத்தின் பின்னர் தனது விஜயத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார். பின்னர் முதலாம் படையின் தளபதி படையினருக்கான உரையொன்றினை நிகழ்த்தியிருந்ததோடு, அதனையடுத்து பிரதேச கேட்போர் கூட மண்டபத்தில் படைப்பிரிவு தளபதியினால் அவர்களது வகிபாகம் தொடர்பில் முதலாம் படையின் தளபதிக்கு விளக்கமளிக்கப்பட்டது. இறுதி அம்சமாக விருந்தினர் பதிவேட்டில் தளபதி கையொப்பம் இட்டதை தொடர்ந்து நிகழ்வு நிறைவு கண்டது.
அதேநேரம் முதலாம் படை தளபதிக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.