12th November 2021 12:32:34 Hours
கொழும்பில் உள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் நடவடிக்கைகளுக்கான தலைவி திருமதி தாரா பியோடோரா மெண்ட்கொமெரி யாழ். குடாநாட்டுக்கான விஜயத்தின் போது புதன்கிழமை (10) திகதி யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
அதன்படி அவருடன், வருகை தந்திருந்த வவுனியாவிற்கான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் தலைவர் திரு இக்னாசியோ ஜேவியர் மார்ட்டின் அவர்களுக்கும் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது, யாழ். தளபதியவர்களால் குடாநாட்டில் படையினரின் செயற்பாடுகள், பணிகள் மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு பணிகள் என்பன் தொடர்பில் மேற்படி இருவருக்கும் விளக்கமளிக்கப்பட்டது.
சந்திப்பின் நிறைவில் தாரா பியோடோரா மெண்ட்கொமெரி அவர்களால் விருந்தினர் பதிவேட்டில் எண்ணப் பகிர்வுகள் பதிவிடப்பட்டது.