11th November 2021 15:00:10 Hours
அரசாங்கத்தின் கரிம உர உற்பத்தி திட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் முகமாக, திருகோணமலையில் உள்ள இராணுவ நிருவாக கல்லூரியில் தயாரித்த 500 கிலோ சேதன பசளை தொகுதியானது அக்கல்லூரியின் தளபதி பிரிகேடியர் ரஞ்சன் ஜயசேகர அவர்களினால் ஒக்டோபர் 25 ஆம் திகதி கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு வழங்கி வைக்கப்பட்டது.
இரசாயனத்தின் மூலம் மக்களால் நுகரப்படும் இரசாயனங்களின் அபாயங்களைக் குறைக்கக்கூடிய தேசிய இயக்கத்திற்கு ஆதரவளிக்கும் முயற்சியில் அக்கல்லூரி தளபதியின் வழிகாட்டுதலின் கீழ் அதிகாரிகள் மற்றும் சிப்பகாய்களின் ஒத்துழைப்புடன் வளாகத்தில் மூன்று மாதங்களுக்கு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.