11th November 2021 14:30:10 Hours
ஞாயிற்றுக்கிழமை (7)ம் திகதி சிலாவத்துறை சிஹல விஜயகம ஸ்ரீ விஜயதிலக விஹாரையில் வருடாந்தம் நடத்தப்படும் ‘கட்டின சீவர பிங்கம’ நிகழ்விற்கு 54 வது படைப் பிரிவின் 541 வது பிரிகேடின் படையினர் மூலம் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.
இதன் பின்னர் கதீன பெரஹெரா, 13 துறவிகளுக்கு அன்னதானம், புதிய ஸ்தூபிக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏழை பொதுமக்களுக்கு 100 உணவுப் பொதிகளும் விநியோகிக்கப்பட்டது.
541 வது பிரிகேடின் தளபதி பிரிகேடியர் கே.டபிள்யூ. சுரேஷ் பெரேராவின் அழைப்பின் பேரில், 54 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர மற்றும் பல நன்கொடையாளர்கள் இந்நிகழ்வு வெற்றிகரமான ஆரம்பத்திற்கு தமது ஒத்துழைப்பினை வழங்கினர்.
மேஜர் ஜெனரல் தர்ஷன விஜேசேகர பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு புதிய ஸ்தூபிக்கான அடிக்கல்லை நாட்டி வைத்தார். 541 வது பிரிகேடின் தளபதி, 542 வது பிரிகேடின் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் நன்கொடையாளர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.