11th November 2021 15:50:10 Hours
வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 21 வது படைப் பிரிவின் கீழுள்ள 213 பிரிகேடின் 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் 31 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நொச்சியாகம பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஒட்டப்புவ பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை (9) ம் திகதி கர்ப்பிணித் தாய்மார்களுக்கு 50 உலர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது.
வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் 21 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் மொஹான் ரத்நாயக்க, 213 வது பிரிகேடின் தளபதி கேர்ணல் எல்.ஜி.ஜே.என் ஆரியதிலக மற்றும் 4 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எஸ்.பி பண்டார ஆகியோர் இணைந்து இந்த விநியோகத் திட்டத்தை கண்காணித்தனர்.