08th November 2021 21:20:22 Hours
முல்லைத்தீவு நாயாறு குருகந்த ரஜமஹா விகாரையின் வருடாந்த கட்டின பூஜை நிகழ்வுகள் ஒக்டோபர் 30-31 ஆம் திகதிகளில் விகாரையின் முன்னாள் தலைமை தேரர் மறைந்த கொழும்பு மேதாலங்கார கித்தி தேரரின் 2ஆம் ஆண்டு நினைவு தின திகழ்வுடன் விகாரை வளாகத்தில் ஆரம்பமானது.
இந்த சமய நிகழ்வுகளுக்கு, விகாரையின் தற்போதைய தலைமை தேரர், 59 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி சூரியபண்டாரவிடம் உதவிகளை கோரியிருந்தார்.
இதன்படி, கேணல் விஸ்வஜித் வித்யானந்த தலைமையிலான 593 வது பிரிகேடின் 19 வது கெமுனு ஹேவா படையணியினர் மற்றும் 5 வது இலங்கை சிங்கப் படையணி சிப்பாய்கள் வருடாந்த நிகழ்வு மற்றும் 2 ஆம் ஆண்டு நினைவு தின நிகழ்வுகளை நடாத்துவதற்கான உதவிகளை வழங்கினர்.