Header

Sri Lanka Army

Defender of the Nation

08th November 2021 18:12:13 Hours

121 வது பிரிகேடின் படையினர் 2600 மரக்கன்றுகள் நடுகை

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 121 வது பிரிகேடின் 12 ஆவது படைப்பிரிவின் படையினர், இராணுவத்தின் பசுமை திட்டமான “துரு மிதுரு நவரடக்” கொள்கைக்கு இணங்க, சனிக்கிழமை (6) கொட்டியாகல வனப்பகுதியில் மீள் காடாக்கும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.

இந்நிகழ்வின் போது, மொனராகலையில் முப்படையினர் மற்றும் பல மாவட்ட வன உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் வன உத்தியோகத்தர்களுடன் இணைந்து இலுப்பை, மருதம்,தேக்கு , பலா, புளி உள்ளிட்ட 2600 மரக்கன்றுகள் நடப்பட்டன.

மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா, 12 வது படைப்பிரிவின் தளபதி மற்றும் 121 வது பிரிகேடின் தளபதி ஆகியோரின் மேற்பார்வை மற்றும் வழிக்காட்டலில் இத்திட்டம் 121 வது பிரிகேட் படையினரால் முன்னெடுக்கப்பட்டது.