05th November 2021 20:43:13 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 16 வது தளபதியாக இலங்கை பீரங்கி படையணியின் மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க வியாழன் (4) அன்று மத சம்பிரதாயங்களுக்கு மத்தியில் முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தில் பதவியேற்றார்.
முல்லைத்தீவு பாதுகாப்பு படை தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் புதிய தளபதியின் வாகன தொடரணிக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையுடன் வரவேற்கப்பட்டதுடன் அன்றை தின நினைவாக தலைமையக வளாகத்தினுள் மா கன்றை நடுவதற்காக அழைக்கப்பட்டார்.
அதன் பின்னர் மகா சங்க உறுப்பினர்கள் ஆசீர்வாதங்களை வேண்டி 'செத்பிரித்' பாராயணங்கள் ஆரம்பித்ததையடுத்து மேஜர் ஜெனரல் வனசிங்க தனது புதிய அலுவலகத்தில் முறையான ஆவணத்தில் கையொப்பமிட்டு தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொண்டதை அடையாளப்படுத்தினார்.
முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்புப் பிரதேச தளபதி, 57, 59, 64, 66 மற்றும் 68 வது படைப்பிரிவுகளின் தளபதிகள், பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள் மற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கமைய ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.
மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க இப் புதிய நியமனத்திற்கு முன்னர் இராணுவ தலைமையகத்தின் பிரதி நிறைவேற்று பணிப்பாளராக இருந்தார். மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்றதையடுத்து குறித்த பதவிக்கு அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.