01st November 2021 17:04:02 Hours
கிளிநொச்சியை தலைமையகமாகக் கொண்ட இலங்கை இராணுவத்தின் 1 முதலாம் படையணியின் கீழ் உள்ள தம்புள்ளையில் அமைந்துள்ள 53 வது படைப்பிரிவின் 28 வது தளபதியாக மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ வியாழக்கிழமை (28) அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக நியமனம் பெற்ற மேஜர் ஜெனரல் சஞ்சீவ பெர்னாண்டோ மத அனுட்டானங்களுக்கு மத்தியில் அலுவலக கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டு கடமைகளை பொறுப்பேற்றுகொண்டார்.
பிரிகேட் தளபதிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் , பதவி நிலை அதிகாரிகளும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
முன்னர் மேற்படி நியமனத்தை வகித்த இலங்கை இராணுவ பயிற்சி கட்டளையின் தற்போதய தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களுக்கு பதிலாக இவர் இப்புதிய பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.