Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2021 09:32:00 Hours

புதிய நிறைவேற்று நாயகமாக மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்ல பதவியேற்றார்

இலங்கை இராணுவத்தின் 33 வது நிறைவேற்று நாயகமாக விஜயபாகு காலாட்படையின் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா வெள்ளிக்கிழமை (29) சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக நிறைவேற்று நாயக கிளையில் நடைபெற்ற எளிய நிகழ்வின் போது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

மத ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் சுப வேளையில் உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு அவர் தனது புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதை அடையாளப்படுத்தினார்.

குறித்த பதவியினை வகித்த மேஜர் ஜெனரல் சஞ்சய வனசிங்க முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதியாக நியமிக்கப்பட்டதை அடுத்து இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இப் பதவிற்கு முன்னர் மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸல்லா யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் தளபதியாகப் பணியாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் இராணுவ நிறைவேற்று நாயக கிளையின் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்