Header

Sri Lanka Army

Defender of the Nation

30th October 2021 10:32:00 Hours

வரலாற்று உறவுகளின் நினைவுக்கூறலுடன் இலங்கை மற்றும் ரஸ்ய இராணுவ தளபதிகளுக்கிடையில் நல்லெண்ண சந்திப்பு

இலங்கை மற்றும் ரஸ்ய இராணுவங்களுக்கிடையிலான உறவுகளோடு இயந்திரவியல் மற்றும் மின்னியல் கட்டமைப்புக்களை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கையின் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஜெனரல் ஒலெக் சல்யுகோவ் ஆகியோரிடையேயான சந்திப்பு ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்றது. இலங்கை இராணுவ தளபதிக்கு வழங்கப்பட்ட மரியாதைகளை தொடர்ந்து இரு தரப்புக்களுக்கும் இடையிலான நட்புறவுச் செயற்பாடுகள் தொடர்பிலான விரிவான கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றன.

ரஸ்ய பாதுகாப்பு படை தளபதியின் அலுவலகத்திற்கு விஜயம் செய்த இலங்கை இராணுவத் தளபதிக்கு அளிக்கப்பட்ட வரவேற்பை தொடர்ந்து, திங்கட்கிழமை (25) இடம்பெற்ற சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் பல நூற்றாண்டுகளாக செழித்தோங்கிய வரலாற்று உறவுகள் நினைவுக்கூறப்பட்டன. ரஸ்ய அரசாங்கம் இலங்கைக்கு வழங்கிய தாராள மனப்பான்மையுடனனான மற்றும் உரிய நேரத்திற்கான தொழில்நுட்ப மற்றும் இயந்திரவியல் ரீதியிலான ஆதரவிற்கு இலங்கை தளபதி நன்றிகளை தெரிவித்தார். மேலும் இந்த சந்திப்பில் மே 2009 க்கு முன்னர் நாடு பிளவுபடும் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டிருந்த போது, இடம்பெற்ற இந்த சுமூகமான கலந்துரையாடல் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ விடயங்கள் மற்றும் ஒத்துழைப்புகள், இலங்கை முப்படையினருக்கான பயிற்சி தளங்களை மேம்படுத்துவதற்கான உதவிகள், கூட்டு இராணுவ நடவடிக்கைகள், இயந்திர மற்றும் பொறியியல் தொழில்நுட்பங்கள் பற்றிய அறிவு பரிமாற்றம், பாதுகாப்பு நலன்களில் பிராந்திய ஒத்துழைப்பு என்பன தொடர்பிலும் ஆராயப்பட்டன.

அதனையடுத்து, ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதியவர்களால் தனது அழைப்பை ஏற்று ரஸ்ய கூட்டமைப்பிற்கு வருகை தந்தமைக்காக இலங்கை இராணுவத் தளபதிக்கு பாராட்டுக்களை தெரிவித்தார். அதேபோல் மொஸ்கோவிலுள்ள கிரெம்லின் கார்டணில் வழங்கப்பட்ட உயர் இராணுவ மரியாதைகளுக்காக நன்றிகளையும் தெரிவித்தார். பின்னர் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியிலும் நட்புறவு மற்றும் புரிதல்களை வலுப்படுத்தும் விதமான விஜயத்தில் கலந்துகொண்டமைக்காக நன்றிகளை கூறிக்கொண்ட ரஸ்ய தளபதி இலங்கை தளபதிக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கிவைத்தார். ரஸ்ய பாதுகாப்பு படைத் தளபதியின் அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி சந்தி்ப்பில் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.

ஜெனரல் ஷவேந்திர சில்வா ரஸ்ய கூட்டமைப்பில் தங்கியிருந்த நாட்களில் மாஸ்கோவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த உயர் ஆயுதக் கட்டளை கல்லூரிக்கு அதன் தளபதி மேஜர் ஜெனரல் ரோமன் பின்யுகோவ் உடன் விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதோடு நரோ - போமின்க்ஸ் கல்லூரியின் 4 வது கார்ட்ஸ் டேங் படைப்பிரிவு மிகைலோவ்ஸ்கயாவில் இராணுவ பீரங்கி கல்வியற் கல்லூரி, இராணுவ மருத்துவ கல்வியற் கல்லூரி மற்றும் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ தளங்களுக்கும் சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பல பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்டிருந்தார்.

அதேநேரத்தில் 2020 பெப்ரவரி மாதத்தில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த, ரஸ்ய பாதுகாப்பு படைகளின் தளபதி ஒலெக் சல்யுகோவ் அவர்கள் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதற்கான பதில் விஜயம் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் கொவிட் 19 பரவல் காரணமாக கால வரையரையின்றி ஒத்தி வைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.