25th October 2021 08:00:00 Hours
வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக ரணசிங்க இலங்கை இராணுவ மகளிர் படையணியின் 20 வது படைத் தளபதியாக திங்கட்கிழமை (18) பொரளையில் உள்ள படையணி தலைமையகத்தில் பொறுப்பேற்றார்.
புதிதாக நியமிக்கப்பட்ட படைத் தளபதி முகாமிற்கு வருகை தந்த போது இலங்கை இராணுவ மகளிர் படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் புதிய படைத் தளபதி தனது புதிய அலுவலகத்தில் கடமைகளை ஏற்றுக்கொள்வதைக் குறிக்க ஆவணத்தில் கையெழுத்திட்டார்.
படையினருக்கு உரையாற்றிய பின்னர் சில சிரேஷ்ட பெண் அதிகாரிகளுடன் தேனீர் விருந்தினை பகிர்ந்து கொண்டார். இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் நிலைய தளபதி உட்பட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.