Header

Sri Lanka Army

Defender of the Nation

25th October 2021 10:00:00 Hours

கிழக்கு பாதுகாப்பு படை தளபதியும் படையினரும் 'சந்த ஹிரு சேய' கலசத்திற்கு வணக்கம் செலுத்தினர்

'சந்த ஹிரு' சேய தூபிக்கான 'சூடா-மாணிக்கம்' (கலசம்) ஏந்திய வாகன அணிவகுப்பு பொதுமக்களின் வழிபாட்டிற்காக ஒக்டோபர் 16ம் திகதி முதல் 21ம் திகதி வரை கிழக்கு மாகாணத்தில் 10 விகாரைகளுக்கு கொண்டு வரப்பட்டது.

அதன்படி, கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக பகுதியின் தீகவாபி ரஜமஹா விகாரை, மஹாவாபி விகாரை, பொல்லேகம ராஜ மகா விகாரை, திம்புலாகல மடம், சோமாவதி ராஜ மகா விகாரை, பௌத்த நிலையம் மெதிரிகிரிய, வேலுன்ன ராஜ மகா விகாரை, சேருவாவில ராஜ மகா விகாரை, திருகோணமலை ஸ்ரீ ஜயசுமணராம மகா விகாரை மற்றும் வெல்கம்வெஹெர ரஜ மகா விகாரை ஆகியவற்றிக்கு 08 நாட்களுக்கும் மேலாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

சோமாவதி கோவிலை வந்தடைந்ததும் கிழக்குப் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய வணக்கம் செலுத்தினார். இதன்போது கடுமையான சுகாதார வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டன 22, 23வது மற்றும் 24 வது படைபிரிவுகளின், அதிகாரிகள் மற்றும் பிற கட்டளை அலகுகளின் சிப்பாய்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.