23rd October 2021 15:30:16 Hours
அதிமேதகு ஜனாதிபதியின் பணிப்புரையின் பேரில் பாடசாலை அபிவிருத்தி திட்டத்திற்கு மேலும் ஒரு முக்கிய பங்களிப்பை வழங்கும் வகையில் இலங்கை இராணுவ பொறியியலாளர் படையணி மாத்தளை மாவட்டத்தின் அக்குரம்பொட வீர கப்பெட்டிபொல மத்திய கல்லூரியில் கட்டட நிர்மாணிப்பு மற்றும் மைதானத்திற்கான பாதுகாப்பு மதில் அமைக்கும் செயற்திட்ட வேலைகளை ஆரம்பித்தனர்.
பாடசாலை விளையாட்டு மைதானத்தை மட்டம் செய்வது மற்றும் துப்பரவு செய்யும் திட்டங்கள் ஜூன் 2021 இல் 6 வது கள பொறியாளர் படையினரால் நிறைவு செய்யப்பட்டது. மேலும் தற்போதைய வேலைகள் 12 வது (தொண்) பொறியாளர் சேவைகள் படையினரால் பொது பொறியியல் பிரிகேட்டின் மேற்பார்வையின் கீழ் பாடசாலைகளில் 11 உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொண்டு வருகின்றது.
பிரதம களப் பொறியியலாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர, பொறியியலாளர் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர ஆகியோரின் கண்காணிப்பில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.