Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd October 2021 13:00:16 Hours

14 வது படைபிரிவு படையினரால் வீடற்ற குடும்பத்திற்கு புதிய வீடு

மேற்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 14 வது படைப்பரிவின் 12 வது கஜபா படையணி மற்றும் 2 வது (தொண்) இலங்கை இலேசாயுத காலாட்படை படை முல்லேரியா வடக்கு பிரதேசத்தில் ஆதரவற்ற குடும்பத்திற்கு வீடு கட்டும் பணி மக்கள் வங்கியின் அணுசரனையுடன் ஆரம்பிக்கப்பட்டது.

மேற்குப் பாதுகாப்பு படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ சேனரத்யாபா அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் 14 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 144 வது பிரிகேட் தளபதி அதன் கட்டுமானத்திற்கான அடிக்கல் நாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

முல்லேரியாவ வடக்கு கிராம சேவையாளர் பிரிவில் நான்கு குழந்தைகளுடன் வசிக்கும் திரு வெல்கமகே சுதர்சன பிரபாத் என்பவருக்கான வீடு அந்த படையினரால் சில வாரங்களுக்குள் நிர்மாணிக்கப்பட்டது.

இந்த விழாவிற்கு 144 வது பிரிகேட் தளபதி கேணல் கே.எம்.வி கொடிதுவக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 144 வது பிரிகேட்டின் சிவில் விவகார அதிகாரி, 12 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் 2 வது (தொண்) இலங்கை இலேசாயுத காலாட் படையின் கட்டளை அதிகாரி ஆகியோரும் இந்த விழாவில் கலந்து கொண்டனர்.

இத்திட்டத்திற்கான பிரதம அனுசரணையினை வழங்கும் மக்கள் வங்கி தலைமையக பிரதிநிதிகள், மக்கள் வங்கி கொட்டிகாவத்த கிளையின் முகாமையாளர் திரு மற்றும் திருமதி ஜெயசூர்ய ஆகியோரும் அடிக்கல் நாட்டும் விழாவில் கலந்து கொண்டனர். இந்த திட்டம் 144 வது பிரிகேட்டினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.