22nd October 2021 14:40:19 Hours
72 வது இராணுவ ஆண்டு நிறைவை முன்னிட்டு முல்லைத்தீவு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 59 வது படைப்பிரிவின் 591 வது மற்றும் 593 வது பிரிகேட்களின் 12 வது இலங்கை இலேசாயுத காலாட்படை, 24 வது இலங்கை சிங்க படை, 19 வது கெமுனு ஹேவா மற்றும் 5 (தொண்) இலங்கை சிங்க படை படையினர் வடிடுவாக் முதல் கோகிலாய் வரையான கடற்கரையோர பகுதியை சுத்தம் செய்யும் திட்டத்தை மேற்கெண்டனர்.
முல்லைத்தீவு பிரதேச சபையினால் கிடைக்கப்பெற்ற உழவு இயந்திரங்களின் உதவியுடன் கடற்கரையிலிருந்த பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பொலித்தீன் போன்ற கடல் மாசுக்கள் அகற்றப்பட்டன.
இத் துய்மையாக்கள் திட்டத்தில் 59 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.டி.சூரியபண்டார, 59 வது படைப்பிரிவின் கேணல் பொதுப் பணி, 591 வது மற்றும் 593 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி மற்றும் 12 வது இலேசாயுத காலாட் படை, 24 வது சிங்க படை, 19 வது கெமுனு படை மற்றும் 5 வது (தொண்) சிங்க படை கட்டளை அதிகாரிகள் உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.