22nd October 2021 10:00:29 Hours
பராக்கிரமபாகு மன்னரால் கட்டப்பட்ட தூபியான '' தேமல மகா சேய''வின் சீரமைப்புப் பணிகளிக்கு சனிக்கிழமை (16) கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின் படையினர் தமது உதவிகளை வழங்கினர். கிமு 12 ஆம் நூற்றாண்டின் பழமையான கல் விஹாரய (பாறை கோவில்) மற்றும் திவாங்க பிலிமகே (பட வீடு) நகரமான பொலன்னறுவையில் அமைந்துள்ளது.
கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் கிழக்குப் முன்னரங்கு பிரதேச தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் தொடங்கப்பட்ட முழு நாள் திட்டம் கிழக்குப் முன்னரங்கு பிரதேச பணிநிலை அதிகாரி (நிர்வாகம்) லெப்டினன்ட் கர்னல் நந்ததிலக அவர்களின் மேற்பார்வையில் முன்னெடுக்கப்பட்டது கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச கட்டளை அலகுகளின் 100 இராணுவ வீரர்கள் இந்த திட்டத்திற்கு பங்களித்தனர்.