22nd October 2021 13:00:29 Hours
52 வது படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்கவின் வழிகாட்டுதலின் பேரில் இராணுவ தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) மிருசுவில், விடத்தல்பலை, கொடிகாமம் மற்றும் வல்லை பகுதிகளில் வசிக்கும் 50 ஏழைக் குடும்பங்களுக்கு 52 வது படைபிரிவு படையினரின் சொந்த நிதியில் உலர் உணவுப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டன.
52 வது படைப்பிரிவு மற்றும் 521 வது பிரிகேட் இணைந்து வழங்கிய ஒவ்வொரு உலர் உணவு பொதிகளும், ரூ. 3000/= பெருமதியான அரிசி, பருப்பு, சீனி, பால்மா, உப்பு, தேயிலை, வெங்காயம் போன்றவை உள்ளடக்கப்பட்டிருந்தன.
521 வது பிரிகேட் தளபதி, கட்டளை அதிகாரிகள், சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி விநியோகத் திட்டத்தில் பங்குபற்றினர்.