19th October 2021 11:59:34 Hours
இராணுவத்தின் 72 வது ஆண்டு விழாவை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 10,000 'மருத' மரக்கன்றுகள் நடும் முகமாக, கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக படையினர் அப்படைத் தலைமைய தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் அறிவுறுத்தலின் பேரில், ஞாயிற்றுக்கிழமை (10) ஆம் திகதி 1600 'மருத' மரக்கன்றுகளை படைத் தலையைக வளாகத்தில் நட்டனர்
இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரில், நாடு முழுவதும் உள்ள அனைத்து இராணுவ படைப்பிரிவுகளிலும் தங்கள் முகாம்களுக்குள் ‘மருத’ மரக்கன்றுகளை நடுகை செய்தனர்,
அதன்படி, கிழக்கு பிராந்தியத்தில் 'மருத'மரக்கன்டுகள் நடுகை கிழக்கு பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரியவின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ் மற்றும் அந்தந்த பாதுகாப்புப் படைகளின் தளபதிகள், அதிகாரிகள் மற்றும் பிற சிப்பாய்கள் பங்கேற்புடன் தொடங்கியது. குறித்த மரக்கன்றுகள் பெரிதாக வளரும் வரை நன்றாக பராமரிக்கப்படும்.