15th October 2021 17:49:36 Hours
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ தளபதி உட்பட அவருடனான தூதுக்குழுவினர் செவ்வாய்க்கிழமை (14) கண்டியிலுள்ள தலதா மாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
கண்டிக்கு வருகைத்தந்த தூதுக்குழுவினருக்கு 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களின் தலைமையில் சிறப்பு வரவேற்பளிக்கப்பட்டதோடு, மாலை வேளை இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவரது பாரியார் மற்றும் தூதுக்குழுவினர் வழிபாடுகளுக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதன்போது தலாதா மாளிகையின் நுழைவு வளாகத்தில் மல்லிகைப்பூ தட்டினை வழங்கி தளபதிக்கு வரவேற்பளித்த தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, இந்திய இராணுவ மற்றும் தளபதி தூதுக்குழுவினரை உயர் பீட வழிபாட்டு அறைக்கு அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கதாகும்.