Header

Sri Lanka Army

Defender of the Nation

13th October 2021 14:00:54 Hours

இந்திய இராணுவ தளபதி இந்திய இராணுவத்தின் அமைதிகாக்கும் படையில் உயிர்நீத்த ஜவான்களுக்கு மலர் அஞ்சலி

இலங்கைக்கான ஐந்துநாள் (ஒக்டோபர் 12-16) நல்லண்ண விஜயம் மேற்கொண்டு வருகை தந்திருக்கும் ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே, பிவிஎஸ்எம், ஏவிஎஸ்எம், எஸ்எம், விஎஸ்எம், ஏடிசி அவர்களால் தனது விஜயத்தின் ஒரு அங்கமாக பத்தரமுல்லையிலுள்ள இந்திய அமைதிகாக்கும் படையின் உயிர்நீத்த வீரர்களுக்கான நினைவுத்தூபிக்கு இன்று (13) காலை மலர் அஞ்சலி செலுத்தினார்.

இதன்போது பாதுகாப்பு பதவி நிலை அலுவலகத்தின் தலைமை பதவி நிலை அதிகாரி மேஜர் ஜெனரல் அஜித் திசாநாயக்க அவர்கள் இந்திய இராணுவ தளபதியை வரவேற்றதோடு நினைவஞ்சலிக்கான அமைக்கப்பட்ட சிறப்பு மேடைக்கு இந்திய இராணுவ தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து இலங்கை இராணுவ பொலிஸ் படையினரின் மரியாதைக்கு மத்தியில், ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவனே அவர்கள் 1987 - 1990 க்கு இடையில் இலங்கையில் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த சக இந்திய வீரர்களின் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அதனையடுத்து இராணுவ பாரம்பரியம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு அமைவான கௌரவ மரியாதை வழங்குவதற்கான ஒலி எழுப்பப்பட்டது.

இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா, இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இலங்கை இராணுவத்தின் சிரேஸ்ட அதிகாரிகள் சிலரும் கலந்துகொண்டனர்.