Header

Sri Lanka Army

Defender of the Nation

10th October 2021 14:00:31 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் அர்பணிப்பான பெண்ணுக்கு புதிய வீடு அன்பளிப்பு

இராணுவ ஆண்டு விழாவை முன்னிட்டு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் வெலிக்கந்த முத்துவெல்ல பகுதியில் உள்ள பெண்னொருவரின் குடும்பத்திற்கு வெள்ளிக்கிழமை (8) இராணுவத்தினரால் கட்டப்பட்ட புதிய வீடு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த வீடானது 233 வது பிரிகேடின் 9 வது பீரங்கி படை சிப்பாய்களால் 60 நாட்களுக்குள் நிர்மாணித்து முடிக்கப்பட்டதோடு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன விஜேசூரிய அவர்களால் கே.பி. தமயந்தி என்னும் அங்கவீனமுற்ற பெண்னுக்கு இந்த வீடு வழங்கி வைக்கப்பட்டது.

சமூக பணிகளுக்காக உருவாக்கப்பட்ட மிஹந்து செத் மெதுர நிதியத்தின் நிதி உதவியுடன் இத்திட்டத்திற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் அவசியமான மேலதிக ஊழியர்கள் ஈடுபடுத்தபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் 23 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நளீன் கொஸ்வத்த, பிரிகேடியர் பொதுப்பணி பிரிகேடியர் சுஜீவ ஜயசிங்க, 233 பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே, 9 வது பீரங்கி படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் தினேஸ் வனிகசேகர ஆகியோருடன் பொதுமக்கள் சிலரும் கலந்துகொண்டனர்.

இத்திட்டத்தை முன்னெடுத்த படையினருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டதோடு அவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.