09th October 2021 20:45:59 Hours
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் மற்றும் வைத்திய உபகரணங்கள் என்பன வைத்தியசாலை வளாகத்தில் வெள்ளிக்கிழமை கையளிக்கப்பட்டன.
மேற்படி ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் அவசர தேவைகளுக்காக பல வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவிலுள்ள இலங்கை அமைப்பொன்றினால் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட வைத்திய உபகரணங்கள் அவசியமுள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படுகின்றன.
குறித்த வைத்திய உபகரணங்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களினால் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துக் கொண்டனர்.