07th October 2021 12:00:04 Hours
தியதலாவை இராணுவ பயிற்சி கட்டளைகள் தளபதியாக நியமனம் வகித்த மேஜர் ஜெனரல் சேன வடுகே 02 அக்டோபர் 2021 அன்று, தனது கடமைகளை கைவிடுவதற்கான நிகழ்வில் கலந்துகொண்டார்.
இதன்போது பயிற்சிக் கட்டளைகள் நுழைவாயிலில் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதோடு மத அனுட்டாங்களுக்கு பின்னர் பதவி வகித்தன் நினைவாக மரக்கன்று ஒன்றையும் நாட்டிவைத்தார்.
அதனையடுத்து இராணுவ பயிற்சிக் கட்டளைகள் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கு ஆற்றிய உரையின் போது சிப்பாய்களுக்கு பயிற்சி வழங்கும் அமைப்பு என்ற வகையில் இராணுவத்தின் எதிர்கால இலக்குகளை அடைந்துகொள்வதற்கான பங்களிப்புச் செய்ய வேண்டியதன் அவசியத்தைஎடுத்துரைத்தார்.
அதனையடுத்து உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி இடம்பெற்ற அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் கலந்துகொண்ட அவர் படையினரோடு எண்ணங்களை பகிர்ந்துகொண்டார்.