Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2021 12:50:42 Hours

வன்னி தலைமையகத்தினால் மற்றும் ஒரு வறிய குடும்பத்திற்கான வீடு நிர்மாணிப்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் சமூக மேம்பாட்டு திட்டத்தின் ஒரு அங்கமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஹேமந்த பண்டார அவர்களின் அறிவுரைக்கமைய மாற்றுத்திறன் கொண்ட இரு பிள்ளைளுடன் அநாதரவான நிலையில் 19 ம் ஒழுங்கை போகஸ்வெவ பகுதியில் வசிக்கும் திருமதி ஜே.எம்.எஸ்.ஜயலத் அவர்களின் குடும்பத்திற்கான புதிய வீடொன்றை நிர்மாணிக்கும் பணிகள் 25 செப்டெம்பர் 2021 அன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் 72 வது இராணுவ தினத்தை முன்னிட்டு முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டங்களுக்கமைய 56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ரோஹித தர்மசிறி (ஓய்வு) அவர்களின் ஒருங்கிணைப்பில் 563 வது பிரிகேடின் 7 வது இலங்கை சிங்கப்படையணியின் சிப்பாய்களால் குறித்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.

இந்த திட்டத்திற்கு பிரதான அனுசரனையாளர்களான லங்கா அட்டோமொபைல் அசோசியேஷனின் தலைவர் திரு தம்மிக்க ஆட்டிகல அவர்களும் மேற்படி ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டனர்.

அத்தோடு அந்நிறுவன பணிப்பாளர் சபையின் உறுப்பினர்கள், 563 பிரிகேட் தளபதி பிரிகேடியர் பண்டுக பெரேரா, 56 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் டீபீஆர்ஈடபிய்யூஎம்எம்என்கே மடுல்கல, முதலாவது இலங்கை சிங்கப்படையின் கட்டளை அதிகாரி மேஜர் எம்ஏஜேஎம் பெரேரா உள்ளிட்ட மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோர் மாத்திரம் உரிய சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

56 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லக்சிறி பெரேரா நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.