Header

Sri Lanka Army

Defender of the Nation

07th October 2021 14:24:04 Hours

தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் வழங்கிவைப்பு

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு அவசர நிலைமைகளின் போது கொவிட் – 19 நோயாளிகளின் அவசியத்திற்காக பயன்படுத்துவதற்கான ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் வழங்கி வைக்கப்பட்டன.

4 வது இலங்கை இராணுவ வைத்திய படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் சிந்தன குமார அவர்களினால் ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் தெல்லிப்பழை வைத்தியசாலையின் பொறுப்பதிகாரி வைத்தியர் பீ திலீபன் அவர்களிடம் செவ்வாய்க்கிழமை (5) உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியும் கொவிட் – 19 பரவல் தடுப்புக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் பணிப்புக்கமைய இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

கொவிட் – 19 பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பிற நோயாளிகளின் பயன்பாட்டிற்காக ஒட்சிசன் அளவீட்டு கருவிகள் இலங்கை அமெரிக்க அறக்கட்டளையினால் இலங்கை இராணுவத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது.