Header

Sri Lanka Army

Defender of the Nation

08th October 2021 10:21:42 Hours

20 குடும்பங்களுக்கு 400 மஞ்சள் செடிகள் பகிர்ந்தளிப்பு

மட்டக்களப்பு புள்ளியாவளை பகுதியில் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள குடும்பங்களின் நிலையை கருத்தில் கொண்டு 231 வது பிரிகேடின் 4 வது கெமுனு ஹேவா படையினரால் செவ்வாய்க்கிழமை (05) 20 குடும்பங்கள் வசிக்கும் பொதுப் பகுதியில் பயிரிடுவதற்காக 400 மஞ்சள் செடிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

231 வது பிரிகேட் தளபதி கேணல் டபிள்யூ.எம்.என்.கேடி பண்டார அவர்களின் அறிவுரைக்கமைய படையினரால் 400 மஞ்சள் செடிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன.

4 வது கெமுனு ஹேவா படையணியின் கட்டளை அதிகாரி , 231 வது சிவில் விவகார அதிகாரி மற்றும் கரடியனாறு கமநல அதிகாரி ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.