07th October 2021 11:20:04 Hours
ஏஞ்சல் சர்வதேச பாடசாலையின் பணிப்பாளரும் யாழ்ப்பாண குட் சேர்ச் அசெம்பிலியின் சிரேஸ்ட பாதிரியாருமான வண. சேம் ராஜசூரியர் அவர்களால் 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் தீபால் புஸ்ஸெல்ல அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க கோப்பாயிலுள்ள இடைநிலை பராமரிப்பு நிலையத்திற்கு திங்கட்கிழமை (04) வைத்திய உபகரணங்கள் அன்பளிப்புச் செய்யப்பட்டன.
யாழ்பாணம் நாக விகாரையின் மகாநாயக்க தேரர் வண. மீகாஜதுரே சிறிவிமல தேரர், கோண்டாவில் குட்வில் சேர்ச் அசம்பிலியின் வண. அருட்தந்தை ஜெயஸ்ரீ ,யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி, யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் பீ.அபிமான், கோப்பாய் இடைநிலை சிகிச்சை நிலையத்தின் பொறுப்பதிகாரி சிவபாதமூர்த்தி, 511 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஜூட் பெர்னாண்டோ, 51 வது படைப்பிரிவின் சிவில் விவகார அதிகாரி லெப்டினன் கேணல் கிரிஷாந்த பஸ்நாயக்க, 15 வது இலங்கை தேசிய பாதுகாவலர் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் உபுல் விமலரத்ன, கோப்பாய் இடைநிலை பராமரிப்பு நிலையத்தின் வைத்திய ஊழியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
யாழ்.பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களின் வழிகாட்டல்களின் கீழ் இந்நிகழ்வு இடம்பெற்றது.