07th October 2021 11:00:04 Hours
இலங்கை இராணுவ பீரங்கி படையின் பிரிகேடியர் லசந்த ரொட்டிரிகோ பூநரின் பகுதியிலுள்ள 66 வது படைப்பிரிவு தளபதியாக சனிக்கிழமை (03) மத அனுட்டானங்களுக்கு மத்தியில் அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதன்போது புதிதாய நியமனம் பெற்றுக்கொண்ட 66 வது படைப்பிரிவு தளபதிக்கு பணிநிலை அதிகாரிகளால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி சிப்பாய்களால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டது.
அதனையடுத்து பதவியேற்பின் நினைவம்சமாக மரக்கன்று ஒன்றை நாட்டி வைக்குமாறு தளபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தோடு, குழு புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் தளபதி கலந்துகொண்டார். பின்னர் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார்.
அதனையடுத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரையொன்றை நிகழ்த்தியிருந்ததோடு, அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் 66 வது படைப்பிரிவு தலைமையகத்தின் பணிநிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் படையினர் கலந்துகொண்டனர்.
புதிய தளபதிக்கு முன்னதாக மேற்படி நியமனத்தை வகித்த மேஜர் ஜெனரல் அஜித் திஸாநாயக்க அவர்கள் பாதுகாப்பு பதவி நிலை பிரதானி அலுவலகத்தின் பதவி நிலை பிரதானியாக பதவியேற்றுள்ள நிலையிலேயே பிரிகேடியர் லசந்த ரொட்ரிகோ இப்புதிய நியமனத்தை பெற்றுக்கொண்டுள்ளதோடு, இதற்கு முன்னதாக அவர் வெளிநாட்டு பயிற்களுக்கான பணிப்பகத்தின் பணிப்பாளராக செயற்பட்டார்.