Header

Sri Lanka Army

Defender of the Nation

26th September 2021 12:39:01 Hours

இலங்கை இராணுவ பொதுச் சேவை படையினரால் தெங்கு பயிர்செய்கை

நிலாவெளி நாற்றுபண்ணை மற்றும் தென்னை பயிர்செய்கை சபையின் அனுசனையுடன் முதலாவது இலங்கை இராணுவ பொது சேவை படையினரால் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தெங்கு பயிர்ச் செய்கை திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் படைத் தளபதி பிரிகேடியர் எச்ஏபீகே ஹேவாவசம் பயிர்செய்கையின் அவசியத்தை உணர்ந்து அதற்கான திட்டத்தை முன்மொழிந்தார்.

முதலாவது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணி தளபதி சீஎஸ் தெமுனி அவர்களால் அனைத்து பணியாளர்களுடனும் இணைந்து முதலாவது இலங்கை இராணுவ பொதுச் சேவை படையணியின் எல்ல மற்றும் கந்தளாய் பகுதிகளிலுள்ள தெங்கு பயிர்செய்கை திட்டம் ஞாயிற்றுக்கிழமை (19) ஆரம்பித்து வைக்கப்பட்டது.