Header

Sri Lanka Army

Defender of the Nation

17th September 2021 15:35:35 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச படையினருக்கு உரை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, கிழக்கு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தலைமையகத்திற்கு விஜயம் செய்கையில் அதன் தளபதி மேஜர் ஜெனரல் மகேஷ் அபேரத்ன அவர்களினால் புதன்கிழமை (22) வரவேற்கப்பட்டார்.

அவர் முதலில் 3 வது பொறியியலாளர் சேவை படையணியிக்கு விஜயம் செய்த போது அதன் கட்டளை அதிகாரி மேஜர் கே.ஹெட்டியாராச்சி அவர்களினால் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதன் போது இராணுவ மரபுகளின் அடிப்படையில் அதிதியின் வாகன தொடரணிக்கு பாதுகாவல் அறிக்ைகயில் மரியாதை வழங்கப்பட்டது.

பின்னர் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மின்னேரிய காலாட்படை பயிற்சி மையத்தில் கூடியிருந்த படையினருக்கு உரையாற்றுகையில் வாழ்க்கையின் பல்வேறு தொழில்முறை அம்சங்களில் பயிற்சியின் முக்கியத்துவம் மற்றும் ஒழுக்கத்தின் உயர்ந்த தரத்தை பராமரிப்பது மற்றும் இராணுவத்தின் நற்பெயர் உயர்த்தப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் முறைகேடுகள், செயலிழப்புகள் மற்றும் தவறான நடைமுறைகளைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது 3 வது பொறியியலாளர் சேவை படையணி முகாமில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பூப்பந்து திடலையும் தறந்து வைத்தார். பின்னர் மின்னேரியவில் உள்ள 4 வது இராணுவ பொதுப் சேவை படையணிக்கு விஜயம் செய்த போது அதன் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் ஆர் பிலுப்புஆராச்சியினால் வரவேற்கப்பட்டதன் பின்னர் விஜயத்தின் நினைவாக மரக்கன்று ஒன்றினையும் நாட்டி வைத்தார்.

இந்த வியத்தின் போது கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் நிர்வாகம் மற்றும் வழங்கல் பிரிகேடியர் ஜகத் வீரகோன் அவர்களும் உடனிருந்தார்.