Header

Sri Lanka Army

Defender of the Nation

15th September 2021 12:00:36 Hours

பாலஹுருவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை படையினரால் அழிப்பு

இராணுவ புலனாய்வுப் படையினரிடமிருந்து கிடைத்த தகவலுக்கமைய மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 12 வது படைப்பிரிவின் கீழுள்ள 20 இலங்கை இராணுவ சிங்கப் படையணியின் சிப்பாய்களால் தனமல்வில பாலஹுருவ பிரதேசத்தின் பொதுப் பகுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட கஞ்சா செய்கை செவ்வாய்கிழமை (14) ஊடுறுவி அழிக்கப்பட்டது.

மேற்படி சட்டவிரோத கஞ்சா பயிர்செய்கையானது ½ ஏகர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டிருந்ததோடு, 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான மேற்படி செய்கைள் வனப்பகுதிக்குள் மறைமுகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த இடத்தினை சுற்றிவளைத்து பொலிஸாரின் மேற்பார்வையின் கீழ் படையினரால் கஞ்சா செய்கை அழிக்கப்பட்டது.

தனமல்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த நடவடிக்கை மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் அறிவுறுத்தலுக்கமைய, 12 வது படைப்பிரிவு தளபதியின் வழிகாட்டலின் கீழ் முன்னெடுக்கப்பட்டது.