12th September 2021 13:00:02 Hours
யாழ்ப்பாண தேவாலயத்தின் பாதிரியார் வண. எட்வர்ட் அவர்களினால் வவுனியா இடைநிலை பராமரிப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் நோயாளிகளுக்கு அவசியமான பொருட்கள் அடங்கிய 100 பொதிகள் வெள்ளிக்கிழமை (10) வழங்கி வைக்கப்பட்டன.
மேற்படி அத்தியாவசிய பொருட்கள் நோயாளிகள் மற்றும் ஏனைய சிகிச்சை பெறுவோரின் அவசிய தேவைகளை கருத்தில் கொண்டு வழங்கப்பட்டதுடன் அவை வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்களிடம் கையளிக்கப்பட்டன. .