Header

Sri Lanka Army

Defender of the Nation

12th September 2021 09:00:02 Hours

68 வது படைப்பிரிவினரால் புதுக்குடியிருப்பு பகுதியில் தடுப்பூசி வழங்கும் பணிகள் ஆரம்பம்

தேசிய தடுப்பூசி வழங்கல் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்தும் நோக்கில் கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் 68 வது படைப்பிரிவின் 681 மற்றும் 682 வது பிரிகேட் சிப்பாய்களால் புதுகுடியிருப்பு பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு சினோபார்ம் தடுப்பூசியின் முதலாவது மற்றும் இரண்டாவது தொகுதிகள் வழங்கப்பட்டன.

புதுக்குடியிருப்பு, வல்லவாபுரம், முங்கிலாறு மற்றும் தேவிபுரம் பகுதிகளில் தடுப்பூசி மையங்கள் நிறுவப்பட்டிருந்ததோடு, இத்திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டிய அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 68வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி பண்டார அவர்களின் மேற்பார்வையின் கீழ் இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தினால் நடமாடும் தடுப்பூசி சேவைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.