Header

Sri Lanka Army

Defender of the Nation

07th September 2021 13:00:10 Hours

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் தடுப்பூசி வழங்கல் முன்னெடுப்பு

பனாகொடவில் உள்ள இராணுவ வைத்தியசாலையின் வைத்திய பணியாளர்களுடன் இணைந்து மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக படையினர் திங்கள்கிழமை (06) பனகொட போதிராஜாராமாயவில் தடுப்பூசி வழங்கும் திட்டத்தை முன்னெடுத்தனர்.

மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத் யாப்பா அவர்களால் 14 வது படைப்பிரிவு தளபதி கிறிஷாந்த ஞானரத்ன மற்றும் பிரிகேட் தளபதிகளுடன் இணைந்து இத்திட்டம் மேற்பார்வை செய்யப்பட்டது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தினால் நடமாடும் தடுப்பூசி சேவைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.