Header

Sri Lanka Army

Defender of the Nation

08th September 2021 12:03:55 Hours

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருக்கும் நோயாளிகளுக்காக 130 க்கும் மேற்பட்ட சிப்பாய்களால் இரத்ததானம்

கண்டி போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது படைப்பிரிவின் அதிகாரிகள் உட்பட 130 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் செவ்வாய்க்கிழமை ( 7) இரத்த தானம் வழங்கினர்.

மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் ஆசிர்வாதத்துடன், 11 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் கித்சிறி லியனகே அவர்களின் மேற்பார்வையின் கீழ் இத்திட்டம் நடைபெற்றது.

இத்திட்டம் வைத்திய அதிகாரிகள் மற்றும் இரத்த வங்கி பணியாளர்களின் ஏற்பாட்டில் நடைபெற்றது.