06th September 2021 12:00:49 Hours
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் கீழுள்ள 12 வது படைப்பிரிவுத் தலைமையக படையினரால், தியத்தலாவையில் உள்ள இராணுவ வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்களுடன் இணைந்து ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் சூரியவெவ, கட்டுவான மற்றும் வீரகெட்டிய பகுதிகளில் சனிக்கிழமை (4) தடுப்பூசி வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, மற்றும் 12 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் பிரசன்ன ரணவக்க ஆகியோரால் பிரிகேட் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளுடன் இணைநற்து மேற்படி தடுப்பூசி வழங்கல் நடவடிக்கை மேற்பார்வை செய்யப்பட்டது.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொவிட் – 19 தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டலின் கீழ் இராணுவத்தினால் நடமாடும் தடுப்பூசி சேவைகள் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.