06th September 2021 16:00:49 Hours
யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழுள்ள 52 வது படைப்பிரிவு தலைமையகத்தின் 26 வது தளபதியாக நியமனம் பெற்றுள்ள பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங் வௌ்ளிக்கிழமை (03) இராணுவ சம்பிரதாய முறைப்படி கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
52 வது படைப்பிரிவின் புதிய தளபதிக்கு படைப்பிரிவு பதவி நிலை அதிகாரிகளினால் வரவேற்பளிக்கப்பட்டதோடு, படையினரால் பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதையும் வழங்கப்பட்டது. பதவியேற்பின் நினைவம்சமாக படைப்பிரிவு வளாகத்திற்கு வருகைத் தந்த தளபதியால் மரக்கன்று ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.
அதனையடுத்து பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் கடமைகளை பொறுப்பேற்பதை குறிக்கும் உத்தியோகபூர்வ ஆவணங்களில் கைசாத்திட்டதுடன், அதிகாரிகள் மற்றும் சிபாய்களுக்கான உரையொன்றினை நிகழ்த்திய பின்னர் அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.
இந்நிகழ்வில் பிரிகேட் தளபதிகள், 52 வது படைப்பிரிவு பதவி நிலை அதிகாரிகள், கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர்.
52 வது படைப்பிரிவு தளபதியாக சேவையாற்றிய மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்கள் வெளிநாட்டு கற்கை நெறி ஒன்றை தொடரச் சென்றிருந்த நிலையில் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க இந்த புதிய நியமனத்தை பொறுப்பேற்றுக் கொண்ட அதேவேளை இந்த நியமனத்திற்கு முன்னர் அவர் இராணுவ தலைமையகத்தில் உதவி இராணுவ செயலாளராக நியமனம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கதாகும்.