02nd September 2021 06:44:40 Hours
மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் ஒருங்கிணைப்பில் பண்டாரவளை பிரதேசத்தின் ஒரு சமூக ஆர்வலர் ஞாயிற்றுக்கிழமை (29) பிந்துனுவெவ இடை நிலை பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைப் பெறுபவர்களின் பயன்பாட்டிற்காக மசாலா திரவியங்கள், தின்பண்டங்கள், முகக்கவசங்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கி வைத்தார்.
ஊவா மாகாண சபையின் திட்டமிடல் பொறியியலாளர் திரு எச்.எம்.ஜயரத்ன அவர்கள் கொத்தமல்லி, பிஸ்கட், சர்க்கரை, பால் மா, முகக்கவசங்கள் என்பவற்றை குறித்த இடத்திற்கு சென்று வழங்கினார். மத்திய பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகேநெத நன்கொடைகளுக்கு நன்கொடையாளருக்கு நன்றி தெரிவித்தார்.