27th August 2021 10:55:45 Hours
இரத்தோட்டை, பண்டரபொல, லக்கல மற்றும் அபங்கங்க கோரளை பிரதேச செயலகப் பகுதிகளை உள்ளடக்கிய, இராணுவத்தின் நடமாடும் தடுப்பூசி வழங்கல் திட்டம் முதியோர், நோய்வாய்ப்பட்டவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சமூகத்தில் பலவீனமான பிரிவினருக்கு தடுப்பூசி வழங்குவதை 53வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் நிஷாந்த மானகே அவர்களின் மேற்பார்வையின் கீழ் செவ்வாய்க்கிழமை (24) முன்னெடுக்கப்பட்டது.
பாதுகாப்பு பதவிநலைப் பிரதானியும் இராணுவத்தளபதியும் கொவிட் -19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் (NOCPCO) தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் கொழும்பில் தொடங்கப்பட்ட நடமாடும் தடுப்பூசி வழங்கும் செயன்முறை வடக்கு, மலை நாடு உள்ளிட்ட பிற மாகாணங்களில் நோயுற்ற விகிதம் அதிகமாக உள்ள பிரதேசங்களில் சேவை விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
53 வது டைப்பிரிவின் பொறுப்பு பகுதிகளில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் நடமாடும் தடுப்பூசி வழங்கல் செயல்முறையின் கீழ் தடுப்பூசி போடப்பட்டது. இதன் வெற்றிக்காக இலங்கை இராணுவ மருத்துவப் படைக்கு 53 வது படைப்பிரிவின் படையினர் முழுமையான உதவியை வழங்கினர்.