27th August 2021 10:48:45 Hours
கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையகத்தின்(SFHQ -E) 23 வது படைப்பிரிவின் 231 வது பிரிகேட்டின் 4 கெமுனு ஹேவா (4 GW) படையினர் வெள்ளிக்கிழமை (20) மத ஸ்தானங்களுக்கு மரியாதை செய்யும் வகையில் ராஜதுறைநகர் பிள்ளையார் கோவில் வளாகத்தை சுத்தம் செய்தனர்.
23 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் நளின் கொஸ்வத்த அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் 231 வது பிரிகேட் தளபதி கேணல் திலீப பண்டார அவர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த சிரமதான பணி படையினரால் முன்னெடுக்கப்பட்டது.