13th August 2021 12:00:33 Hours
இலங்கை பீரங்கிப் படையின் பிரிகேடியர் மஞ்சுள காரியவசம் பொதுப்பணி பணிப்பகத்தின் 33 வது பணிப்பாளராக செவ்வாய்க்கிழமை (10) இராணுவ தலைமையகத்தில் அலுவலக கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிதாக நியமனம் பெற்ற பணிப்பாளர் மத அனுட்டானங்களுக்கு மத்தியில் பதவியேற்புக்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டதுடன் அவர் குறித்த நியமனத்தை பெற்றுக்கொள்ளும் முன்பாக பீரங்கிப் படையின் நிலையத் தளபதியாக நியமனம் வகித்தார்.
பணிப்பகத்தின் பணிநிலை அதிகாரிகளும் சிப்பாய்களும் மேற்படி நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததுடன், இப்பதவியினை முன்பதாக வகித்த பிரிகேடியர் மஹிந்த யஹம்பத் பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் தேசிய பாதுகாப்பு மற்றும் போர்களச் செயற்பாடுகள் தொடர்பில் பயிற்சிக்கு செல்வதால் இவர் மேற்படி பதவிக்கு நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.