11th August 2021 14:15:18 Hours
அரசாங்கத்தின் கொள்கை திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்காகவும், இலங்கை இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்திற்கமைய நெலுங்குளத்திலுள்ள 3 வது இலங்கை இராணுவ வைத்திய படை முகாமில் வட மத்திய முன்னரங்கு பாதுகாப்பு பிரதேச படையினருக்கு சேதன பசளை உற்பத்தி தொடர்பில் 06 ம் திகதி ஓகஸ்ட் மாதம் 2021 அன்று அறிவூட்டப்பட்டது.
நெலுங்குளம் விவசாய மற்றும் உயிரியல் தொழில்நுட்பம் தொடர்பிலான ஆலோசகர் , 3 வது இலங்கை இராணுவ வைத்திய படையின் தளபதி பிரிகேடியர் ஹிமல் குருகே, உட்பட மற்றும் சில அதிகாரிகளும் சுகாதார ஒழுங்குவிதிகளை பின்பற்றி குறித்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.