10th August 2021 10:17:46 Hours
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, இராணுவ தலைமை களப் பொறியாளர் மேஜர் ஜெனரல் நிஹால் அமரசேகர, மற்றும் பொறியாளர் படைபிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜயசுந்தர ஆகியோரின் ஆலோசணைக்கமைய 5 வது இலங்கை பொறியியல் படையினரால் ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசணைக்கமைய முன்னெடுக்கப்பட்டுவரும் 100,000 கிமீ வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் உயர் தரத்துடன் படஹேனவிலிருந்து மில்லகஹவிட்ட பகுதிகளுக்கிடையிலான 4.3 கி மீ தூர வீதியை முழுமையாக அபிவிருத்தி செய்து வருகின்றனர்.
இத்திட்டத்திற்கான செலவாக 2.7 மில்லியன் ரூபாய்கள் செலவாகுமென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதோடு, கள பொறியலாளர் பிரிகேடின் மேற்பார்வையில் படையினரால் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன்படி வீதியின் விஸ்தரிப்பு பணிகளுக்காக மண்ணை அகற்றல், பாறைகளை துளையிடல், வீதியோர பாறைகளை அகற்றல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மேற்படி பாதையை இரு வழி பாதையாக விரிவாக்கம் செய்வதனால் அப்பகுதி மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என்பதும், இந்த திட்டம் 2020 ஆம் ஆண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.