05th August 2021 21:30:59 Hours
இராணுவத்தின் புனர்வாழ்வு பணிப்பகத்தின் 14 வது பணிப்பாளராக பிரிகேடியர் துஷாந்த சேனாரத்ன வத்தளை ஹேகித்தவிலுள்ள அலுவலகத்தில் புதன்கிழமை (04) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
மத வழிபாடுகளுக்கு பின்னர் புனர்வாழ்வு பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் அலுவலக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் கையொப்பமிட்டார். குறித்த நியமனத்திற்கு முன்பாக அவர் ராகம ரணவிரு சேவை அமைப்பின் தளபதியாக நியமனம் வகித்தார்.
இந்நிகழ்வில் பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களும் கலந்துகொண்டனர். மேஜர் ஜெனரல் ஷிரான் அபேசேகர இராணுவ தலைமையகத்தின் நிதி முகாமைத்துவ பணிப்பாளராக பதவியேற்றுக் கொண்டதை அடுத்து இவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.